பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதன் 6-வது சீசன் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த சீசனில் முதன்முறையாக கிராமத்து இசை கலைஞர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் கணவன் - மனைவி.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே இவர்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தன. குறிப்பாக சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது இந்த தம்பதியரை வெகுவாக பாராட்டினர்.
கணவன் மனைவியாக இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் இருவரும் சளைத்தவர்கள் அல்ல என பலமுறை நிரூபித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு செந்தில், ரக்ஷிதா, மாளவிகா, ஸ்ரீகாந்த், அனிருத், சக்தி ஆகியோர் தேர்வாகி இருந்தனர்.
இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இறுதிப்போட்டியில் ஒவ்வொரு போட்டியாளர்களும் இரண்டு பாடல்களை பாடி அசத்தினர். செந்தில் கருப்பசாமி பாடலையும், தாண்டவக்கோனே பாடலையும் பாடி அசத்தினார்.
மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் செந்தில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான வீடும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.
இரண்டாவது இடத்தை ரக்ஷிதா பிடித்தார். அவருக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பரிசாக வழங்கப்பட்டது. 3வது இடத்தை மாளவிகா பெற்றார். அவருக்கு ரூ.5 லட்சம் ரொக்க பரிசு அளிக்கப்பட்டது.
இப்போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டி வரை வந்த ஸ்ரீகாந்த்க்கும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.