ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தென்றல் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நிலானி. அதன்பிறகு பிரியசகி, என் இனிய தோழியே, சுந்தரகாண்டம், அன்னக்கொடியும் 5 பெண்களும், பைரவி போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது பிரியமானவளே தொடரில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு தளத்தில் போலீஸ் உடையில் இருந்த நிலானி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து வீடியோ பதிவாக தனது கருத்தை வெளியிட்டிருந்தார். அதன் சுருக்கம் வருமாறு: நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு வருத்தமளிக்கிறது. அமைதியான வழியில் போராடியவர்கள் 10 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் இல்லாவிட்டால் நானும் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன். இந்த காவல் துறையின் உடை அணிந்திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். உடம்பு கூசுது என பேசியிருக்கிறார்.
இந்த வீடியோ நேற்று வைரலாக பரவியது. நிலானி அதிகம் பிரபலம் இல்லாதால் இது நிஜ போலீஸ் அதிகாரியின் கருத்துபோல வெளியாகி பரபரப்பானது. இதுகுறித்து ரிஷி என்பவர் வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நிலானி மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.