பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் மன்சூர் அலிகான். பெரும்பாலும் வில்லனாக நடித்தவர் சில படங்களில் ஹீரோவாகவும், சமீபகாலமாக காமெடி வேடங்களிலும் நடித்து வருகிறார். தேர்தல் வந்தாலே இவரும் போட்டியிடுகிறேன் என களமிறங்கி விடுவார்.
தேசிய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை துவங்கி, தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னதாக மக்களோடு மக்களாய் கலந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் தேர்தல் முடிவு வரும் முன்பே காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான மனுவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையிடம் இன்று சென்னையில் நேரில் வழங்கினார் மன்சூர் அலிகான்.