விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா, இப்போது ரேடியோ ஜாக்கி, சினிமா நடிகை என பல அவதாரங்களை எடுத்துள்ளார். ரம்யாவின் இன்னொரு முகம் பளு தூக்கும் வீராங்கணை. சமீபகாலமாகத்தான் இந்த துறைக்குள் நுழைத்து அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் தேசிய வீராங்கணையாகியிருக்கிறார். அடுத்து கோல்கட்டாவில் நடக்க இருக்கும் தேசிய பளு தூக்கும் போட்டியில் தமிழ் மாநில அணியின் சார்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதுகுறித்து ரம்யா கூறியதாவது: பல முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வது மூலம், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி தற்போது 35 கிலோ பிரிவில் நான் பங்கேற்று இருக்கிறேன். போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது இந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறேன். இதன் மூலம் நான் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்று இருக்கிறேன். என்னுடைய நாட்டிற்காக விளையாடுவதற்காக, நான் கடினமான பயிற்சியில் ஈடுபட இருக்கிறேன் என்கிறார் ரம்யா.