'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை | ‛தண்டகாரண்யம்' தலைப்புக்கு அர்த்தம் தெரியுமா? | அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப் | மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்? | நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி | பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை” | இன்ஸ்டாவில் பின்தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான் ; மகிழ்ச்சியில் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி' |
பாசமலர் உள்பட பல சீரியல்களில் லீடு ரோல்களில் நடித்தவர் ஜீவிதா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீலி தொடரில் நல்ல ஆத்மாக்களுக்கு உதவி செய்யும் சாமி வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த அனுபவம் குறித்து ஜீவிதா கூறுகையில், சீரியல்களில் நடிக்கத் தொடங்கி எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து விட்டேன். என்றாலும் சாமியின் அருள் பெற்ற கதாபாத்திரம் இப்போதுதான் கிடைத்துள்ளது. இந்த கதாபாத்திரத்திற்காக எனது கெட்டப்பை மாற்றி நடிக்கிறேன். சாமி எனக்குள் வந்து நல்ல மனிதர்களுக்கு உதவி செய்யும் வேடம். இந்த வேடம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
மேலும், இதற்கு முன்பு குடும்பப் பாங்கான கேரக்டர்களில் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும்படியாக நடித்த எனக்கு இந்த நீலி தொடரில் நல்ல ஆத்மாக்களுக்கு உதவி செய்வது போல் நடிப்பது புதுமையாக உள்ளது. அதனால் இந்த வேடத்தை உணர்ந்து இயல்பாக நடித்து வருகிறேன் என்று கூறும் ஜீவிதா, பாடலாசிரியர் பா.விஜய் நாயகனாக நடித்து வரும் ஆருத்ரா என்ற படத்திலும் ஒரு போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.