விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளி சுவாதிஷ்டா கிருஷ்ணன். பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை லிங்குசாமியை பேட்டி எடுக்கச் சென்றபோது "சினிமாவில் நடிக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அப்போது மறுத்து விட்டு வந்துவிட்டார். ஒருமுறை மிஷ்கினை பேட்டி எடுத்தபோது "நான் சவரக்கத்தி என்ற படத்தை தயாரிக்கிறேன். அதில் நடிக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அது இரண்டு குழந்தைக்கு தாய் கேரக்டர் என்பதால் மறுத்துவிட்டார். பின்னர் இன்னொரு கேரக்டர் இருக்கிறது என்று சொன்னபோது உடனே ஓகே சொல்லிவிட்டார். இப்படியாக சுவாதிஷ்டாவை சினிமா நடிகை ஆக்கிவிட்டார்கள்.
முதல் படம் வெளிவருதற்கு முன்பே தற்போது மதம், கீ, அசோக் செல்வன் இயக்கும் படம் என 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். "சின்ன வயசுல விளம்பர படங்கள்ல நடிச்சிக்கேன். மிஷ்கின் சார் கேட்டதும் மறுக்க முடியவில்லை நடிக்க ஒப்புக்கிட்டேன். ஆனா நடிக்கிறதுல குடும்பத்துக்கு அவ்வளவா பிடிக்கல குறிப்பா அப்பாவுக்கு. என்றாலும் நன்றாக நடித்து அவுங்க மனசை மாத்திடலாமுன்னு நம்பிக்கை இருக்கு. நல்ல கேரக்டர்களை தேடிப்பிடித்து நடிப்பேன். கிளாமராக நடிக்க மாட்டேன்" என்கிறார் சுவாதிஷ்டா.