பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் |
சொந்த பந்தம், வள்ளி, நாதஸ்வரம், சரவணன் மீனாட்சி, சபீதா என்கிற சபாபதி உள்பட பல தொடர்களில் நடித்தவர் சாய் சக்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரியான வருமானம் இல்லாததால் விரக்தியடைந்த அவர், தற்கொலை முயற்சியில் ஈடுபடப்போவதாக வாட்ஸ்அப்புகளில் செய்தி வெளியானது. அதையடுத்து, அவரைக்கேட்டபோது, சீரியல்களை நம்பிதான் எனது குடும்பமே உள்ளது. ஆனல் எனக்கு சரியானபடி நடிக்க வாய்ப்பு இல்லை. அதனால் கடன் தொல்லை அதிகமாகி விட்டது. நான் சான்ஸ் கேட்க சென்ற இடங்களில் யாருமே வாய்ப்பு தரவில்லை. அதனால் ஏற்பட்ட மன உளச்சல் காரணமாகத்தான நான் தற்கொலை முயற்சியில் இறங்க முடிவு செய்தேன் என்று சொன்னார் சாய் சக்தி.
இந்தநிலையில், தற்போது துபாய் செய்ய முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார் சாய் சக்தி. அதுபற்றி அவர் கூறுகையில், தமிழ் சீரியல்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வேலை வெட்டி இல்லாத இந்த ஊரில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை. அதனால் துபாய் சென்று அங்குள்ள லோக்கல் சேனல் களில் நடிக்கப்போகிறேன். அங்குள்ள சில நண்பர்கள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பிழைப்பு தேடி துபாய் செல்லும் நான் எப்போது மீண்டும் சென்னை திரும்புவேன் என்று சொல்ல முடியாது. ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோகூட ஆகலாம். சீரியல்களில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே சென்னை திரும்புவேன் என்கிறார் சாய்சக்தி.