ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் |
வளைகுடா நாடான பஹ்ரைனில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியா கிளப் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். பஹ்ரைன் வளர்ச்சிக்கான தொழிலாளர்களின் உழைப்பை பாராட்டி பலரும் பேசினர். இந்திய தூதரக அதிகாரிகளும் மற்றவர்களும் கவுரவிக்பட்டனர். சமூக நல அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 2016- 18ம் ஆண்டிற்கான புதிய குழு பொறுப்பேற்றது.
இந்த நிகழ்ச்சியில், பிரவானா, சுதர்சன் செல்வராஜ், நடன ஆசிரியர் ரோகித், நடிகை வந்தனா, கன்னல் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. பல்வேறு நடிகர்களைப்போல் வேடம் அணிந்து, பின்னணி பாடகர் சரவணன் பாடிய பாடல்கள், நிகழ்வின் முத்தாய்ப்பாக விளங்கின. ரபிக் தலைமையிலான இசைக்குழுவினர் தங்கள் திறமையைக் காட்டினர். டிவி நடிகை ஸ்ருத்திகா, பாடகி சுஜாதா, பாரதி சங்க பாடகர் ஜாபர் சாதிக் ஆகியோருடைய பாடல்களும், பால் நிகழ்த்திய குழல் இசையும் சிறப்பாக இருந்தது.