விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக சின்னத்திரைக்கு வந்தவர் சவுந்தர்யா. அதன் பிறகும் பல நிகழ்ச்சிகளில் பாடகியாக பங்கேற்றவர் இப்போது சீரியல் நடிகையாகிவிட்டார்.
விஜய் டி.வியில் 400 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பான 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ஒளிப்பாகிறது. இதில் முந்தைய தலைமுறையில் காதல் திருமணங்களால் பிரிந்த குடும்பத்தை புதிய தலைமுறை காதல் சேர்த்து வைக்கிறமாதிரியான கதை. இதில் சவுந்தர்யா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
“சீரியலில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. னுனது நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தில் நடிக்கிறேன். பெற்றோர்கள் முதலில் சம்மதிக்கவில்லை. இப்போது சமாதானமாகி ஓகே சொல்லிவிட்டார்கள். இனி பாட்டு, நடிப்பு என்ற இரண்டு பாதையில் எனது பயணம் இருக்கும்” என்கிறார் சவுந்தர்யா.