ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 5வது சீசனின் இறுதி முடிவு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஆன்ந்த் அரவிந்தாக்ஷ்ன் என்பவர் சூப்பர் சிங்கர் டைட்டில் மற்றும் 70 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக பெற்றார். ஆனால் அவருக்கு முதல் பரிசு கொடுத்தது தவறு என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு, புதுமுக பாடகர் பாடகிகள் பங்கேற்றும் அந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சினிமாவில் பின்னணி பாடிய அரவிந்தாக்ஷ்னை பாட வைத்து அவருக்கு பரிசு கொடுத்ததை ஏற்க முடியாது என தொடர்ந்து விஜய் டிவிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விஜய் டிவியினால் கலாய்க்கப்பட்ட நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், விஜய் டிவியில் முதல் பரிசு பெற்றுள்ள அரவிந்தாக்ஷ்ன் நான் இயக்கிய ஆரோகணம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்த வகையில், அவர் ஒரு தொழில்முறை போட்டியாளர் ஆவார். அறிமுக பாடகர்களே பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பின்னணி பாடகரை போட்டியாளராக்கியதை ஏற்க முடியாது.
அதோடு, புதியவர்களுடன் அனுபவசாலிகள் போட்டி போடும்போது புதியவர்கள்தானே பாதிக்கப்படுவார்கள். நம்பி அவர்களது ஷோக்களை பார்க்கிற மக்களை இப்படி ஏமாற்றலாமா? என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானது என்பது தெரியாமல் நான்கூட அரவிந்தாக்ஷ்னுக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன் என்கிறார்.