விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
டிஸ்கவரி சேனலுக்கும், சினிமாவுக்கும் சம்பந்தமில்லைதான். ஆனால் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் டிஸ்கவரி தமிழ் சேனல் சினிமாவில் கால் பதிக்கிறது.
பாலா இயக்கி உள்ள 'தாரை தப்பட்டை' படம் தஞ்சாவூரில் வாழும் கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பற்றியது. கதைப்படி டிஸ்கவரி தமிழ் சேனல் நிருபரும், கேமராமேனும் தஞ்சையில் உள்ள பிரபலமான கரகாட்ட கலைஞர் சாமி புலவரை பேட்டி எடுக்கச் செல்கிறார்கள். அவர் இறந்துவிட அவரது மகன் சன்னாசியிடம் (சசிகுமார்) கரகாட்டம் பற்றி கேட்கிறார்கள். அவர் சொல்லும்போது அது கதையாக விரிகிறது.
இதுபற்றி பாலா, டிஸ்கவரி சேனல் அதிகாரிகளிடம் சொன்னபோது அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்ட சேனல், அதையே தாங்களும் ஒரு டாக்குமெண்டரியாக தயாரித்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு பால ஒப்புக் கொள்ள தற்போது இரண்டு பணிகளும் முடிந்திருக்கறிது.
"தென்னிந்தியாவில் எங்கள் சேனலுக்கு நல்ல மதிப்பு உள்ளது. தென்னிந்திய கலைகளை பற்றி உலகிற்கு தொடர்ந்து சொல்கிறோம். தாரை தப்பட்டை மூலம் கரகாட்டக் கலையை ஆய்வு செய்து அதனையும் சொல்ல இருக்கிறோம். ஒரு நல்ல பணியில் பாலாவுடன் இணைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் டிஸ்கவரி சேனலின் தென்னிந்திய பொது மேலாளர் ராகுல் ஜோரி.