ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே உள்பட பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் நீலிமா ராணி. இப்போது வாணி ராணி, தாமரை, பவானி ஆகிய தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். பாசிட்டீவான வேடங்களை விட நெகட்டீவான வேடங்களில் நடிப்பது தான் சவாலானது என்கிறார் அவர்.
மேலும், இதுவரை தான் நடித்துள்ள வேடங்கள் பற்றி நீலிமா ராணி கூறுகையில், நான் சினிமாவில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். தேவர் மகன் தொடங்கி இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். அந்த வகையில், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் கவனிக்கப்படும் வேடங்களில் நடித்தேன். இப்போதும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
அதேசமயம், சின்னத்திரையில்தான் நான் அதிகப்படியான தொடர்களில் நடித்துள்ளேன். ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொருவிதமான வேடங்கள். ஒரு தொடரில் அமைதியான கேரக்டர் என்றால் இன்னொரு படத்தில் அதிரடியான வேடம். மற்றொரு தொடரில் செண்டிமென்ட் வேடம். இப்படி சின்னத்திரையில் நான் ஏராளமான கேரக்டர்களில் நடித்து விட்டேன். அதனால் சின்னத்திரை என் பண்பட்ட நடிகையாக மாற்றி விட்டது. அதனால் இப்போது முன்பைவிட சவாலான வேடங்களாக தேடிப்பிடித்து நடிக்கிறேன்.
குறிப்பாக, வாணி ராணி தொடரில் எனக்கு நெகடீவ் ரோல். ராதிகா மேடத்தையே டென்சன் செய்யக்கூடிய வேடம். அதனால் அவருக்கு இணையாக அந்த வேடத்தில் நிமிர்ந்து நின்று போட்டி போட்டு நடித்தேன். அது எனக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்து விட்டது. ராதிகா மேடம் உள்ளிட்ட சக கலைஞர்கள் கூட எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். அதனால், இன்னும் சவால் விடக்கூடிய நிறைய வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது என்கிறார் நீலிமாராணி.