விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தீபாவளி அன்று இந்தியத்தொலைக்காட்சியில் முதல்முறையாக விஜய் டிவியில் மாரி படம் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த ஒளிபரப்புக்குப் பின்னால் உள்ள கதை எத்தனை பேருக்குத்தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்... ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவான மாரி படத்தை லைன் புரட்யூஸராக தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துக் கொடுத்தார் தனுஷ். படத்தை எடுப்பதற்கான பணத்தை பேசியபடி கொடுத்தார் ராதிகா. அதனால் திட்டமிட்டபடி படத்தை முடித்துவிட்டார் தனுஷ். ஆனால் தனுஷுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை மட்டும் ராதிகாவினால் பேசியபடி கொடுக்க முடியவில்லை. எனவே மாரி படத்தை ராதிகாவினால் வெளியிட முடியாதபடி, படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகளை முடிக்காமல் பாக்கி வைத்தார் தனுஷ்.
அதன் காரணமாக மாரி படத்தின் ரிலீஸ் தேதி தாமதமாகிக்கொண்டே இருந்தது. இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, சில முக்கியஸ்தர்களை வைத்து தனுஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ராதிகா. கடைசியில் நடைபெற்ற பஞ்சாயத்தில், தனுஷுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்துக்கு ஈடாக மாரி படத்தின் சாட்டிலைட் உரிமயை எழுதிக்கொடுத்தார் ராதிகா. அதன் பிறகே மாரி படம் வெளியானது.
மாரி வெளியாகி பல மாதங்களாகியும் தன் வசமிருந்த மாரியின் சாட்டிலைட் ரைட்ஸை விற்கமுடியாமல் தவித்து வந்தார் தனுஷ். இந்நிலையில் சமீபத்தில்தான் விஜய் டிவியிடம் மாரி சாட்டிலைட் விற்றிருக்கிறார். பெரும் தொகை கொடுத்து மாரியை வாங்கிய விஜய் டிவியோ சுடச்சுட தீபாவளிக்கு விருந்து வைக்க இருக்கிறது.