விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சின்னத்திரை சீரியல் நடிகரும், இயக்குனருமான திருமுருகன், திரு பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நாதஸ்வரம் என்ற தொடரை தயாரித்து, இயக்கி, நடித்தார். 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் 2015ம் ஆண்டு மே மாதம் முடிந்தது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஒளிபரப்பானது. இந்த தொடருக்கு பெரும்பாலான நடிகர் நடிகைகளை இண்டர்வியூ நடத்தித்தான் திருமுருகன் தேர்வு செய்தார்.
இந்நிலையில் இன்னுமொரு புதிய தொடருக்கான பணியில் மும்முரமாக இருக்கிறார் திருமுருகன், அடுத்த தொடருக்கான கதையை எழுதி முடித்து விட்டார். சரத் கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார், சஞ்சீவ் ரத்தன் இசை அமைக்கிறார், ஆறுமுகத் தமிழன் வசனம் எழுதுகிறார். நாதஸ்வரம் போன்றே இந்த தொடருக்கு நடிகர் நடிகைகளை தமிழ்நாடு முழுவதும் நேர்காணல் நடத்தி தேர்வு செய்கிறார். இதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார்.