'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
ஒரு காலத்தில் சின்னத்திரையில் சினிமா மட்டுமே ஒளிபரப்பானது. குறும்படங்களை கண்டு கொள்வதில்லை. இப்போது குறும் படங்களுக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் குறும்படங்களுக்கு மவுசு வந்தது. இப்போது எல்லா தொலைக்காட்சிகளும் குறும்படங்களை ஒளிபரப்புகிறது.
இப்போது இதன் அடுத்த கட்டமாக ஆவணப் படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக செய்தி சேனல்களில் ஆவணப்படங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கி உள்ளது. தனி சிலாட்களை ஒதுக்கி ஆவணப்படங்களை ஒளிபரப்புகிறது.
சர்வதேச அளவில் கவனம் பெற்ற ஆவணப்படங்களையும் ஒளிரப்புகிறார்கள். இஸ்ரேல், பாலஸ்தீனம் போர், இலங்கை இறுதியுத்தம், நோபல் பரிசு பெற்ற மலாலாவின் வாழ்க்கை, சேகுவாராவின் கடைசி நாட்கள், காஷ்மீரில் நடப்பது என்ன? என்பது போன்ற சர்வதேச ஆவணப்படங்களும், தர்மபுரி பெண் சிசு கொலைகள், மீத்தேன் வாயு பிரச்சினை, கூடங்குளம் அணுஉலை போன்ற உள்ளூர் ஆவணப்படங்களும் ஒளிபரப்பாகிறது. இதற்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு செலவே இல்லாமல் நல்ல புட்டேஜும் கிடைக்கிறது.