எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் |
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ரேஷ்மா பசுபுலேட்டி, அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, படித்தவர், ஏர்ஹோஸ்டாக பறந்து கொண்டிருந்தவர் இப்போது பிசியான சீரியல் நடிகை.
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி, அதன் பிறகு வாணி ராணி, வம்சம், சுந்தரகாண்டம் உள்பட பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது என் இனிய தோழியே தொடரில் ஹீரோயினியாகி இருக்கிறார்.
இதுபற்றி ரேஷ்மா கூறியதாவது: பல சீரியல்களில் வேறு வேறு கேரக்டர்களில் நடிப்பதை விட ஒரே சீரியலில் ஹீரோயினாக நடிப்பதுதான் நல்லது. முழு கவனத்தையும் அந்த கேரக்டருக்கு கொடுக்க முடியும். ஆனாலும் சீரியல் ஹீரோயினாக தொடர கடுமையாக உழைக்க வேண்டும். காரணம் ஹிரோயின் இல்லாத எபிசோடே இருக்க முடியாது. தற்போது நடிக்கும் என் உயிர் தோழியே சீரியல் சமூக பிரச்னையை பேசும் சீரியல், ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார்கள். இயக்குனர் செந்தில்குமாரும், தயாரிப்பாளரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன். என்கிறார் ரேஷ்மா.