விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தென்றல் தொடரில் தமிழ் என்ற கேரக்டரில் நடித்து வருகிறவர் தீபக். தொடரின் மூலம் நல்ல பெயரை பெற்றிருக்கும் தீபக்கை அவரது நண்பர்கள் சினிமா ஹீரோவாக்கி விட்டார்கள். தீபக்கின் நெருங்கிய நண்பர்களான வெங்கட்ராஜ், எஸ்.என்.சக்திவேல் ஆகியோர் இணைந்து இவனுக்கு தண்ணியில கண்டம் என்று ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் தீபக்தான் ஹீரோ. சத்தமே இல்லாமல் 50 சதவிகித படப்பிடிப்பை முடித்து விட்டார்கள். சில பாடல் காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சிகளும் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. புதுமுகம் நேகா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். சக்தி வேல் என்பவர் இயக்குகிறார்.
"படத்துல நான் ஹீரோவெல்லாம் கிடையாது. கதையின் நாயகன்னு சொல்லலாம். பக்கத்து வீட்டில் உள்ள ஒரு சாதாரண இளைஞனைப்போல நடித்திருக்கிறேன். முழு நீள காமெடி ஸ்கிரிபிட்" என்கிறார் தீபக்.