பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை வீடு மேல் வீடு, ஒன்றுக்கு இரண்டு கார்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலையை அன்று உற்றார் உறவினரும் சரி, ரசிகர்களும் சரி கடிந்து தான் பேசினார்கள். இவர்கள் திருமணம் நடந்து சில ஆண்டுகளில் ஹூசைன் மணிமேகலை இருவருமே மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால், தற்போது சொந்த ஊரில் பண்ணை வீடு, சென்னையில் அப்பார்ட்மெண்ட் வீடுகள், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் விலையுயர்ந்த பைக் என சாதித்து காட்டியுள்ளனர்.
இந்நிலையில், மணிமேகலை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நாங்கள் முதலில் ஐ-20 கார் வைத்திருந்தோம். அதற்கு மூன்று மாதங்கள் தவணை கட்டவில்லை என்று காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அப்போது நாங்கள் முடிவெடுத்தோம். அடுத்த நான்கு வருடத்திற்குள் பிம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்று. ஆனால், இரண்டரை வருடத்திலேயே அது நடந்துவிட்டது. அதேபோல் சென்னையில் வாடகை வீட்டிலும் பிரச்னை வந்தது. இப்போது வீடு வாங்கிவிட்டோம். இந்த கஷ்டமான நேரத்தில் என்னுடன் இருந்து எனக்கு ஆறுதல் தந்தது ஹுசைன் தான். அவரது ஆதரவினால் தான் நான் இன்றும் மீடியாவில் நிலைத்து நிற்கிறேன்' என மணிமேகலை அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.