பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சின்னத்திரை பிரபலமான மணிமேகலை வீடு மேல் வீடு, ஒன்றுக்கு இரண்டு கார்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலையை அன்று உற்றார் உறவினரும் சரி, ரசிகர்களும் சரி கடிந்து தான் பேசினார்கள். இவர்கள் திருமணம் நடந்து சில ஆண்டுகளில் ஹூசைன் மணிமேகலை இருவருமே மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால், தற்போது சொந்த ஊரில் பண்ணை வீடு, சென்னையில் அப்பார்ட்மெண்ட் வீடுகள், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் விலையுயர்ந்த பைக் என சாதித்து காட்டியுள்ளனர்.
இந்நிலையில், மணிமேகலை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நாங்கள் முதலில் ஐ-20 கார் வைத்திருந்தோம். அதற்கு மூன்று மாதங்கள் தவணை கட்டவில்லை என்று காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அப்போது நாங்கள் முடிவெடுத்தோம். அடுத்த நான்கு வருடத்திற்குள் பிம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்று. ஆனால், இரண்டரை வருடத்திலேயே அது நடந்துவிட்டது. அதேபோல் சென்னையில் வாடகை வீட்டிலும் பிரச்னை வந்தது. இப்போது வீடு வாங்கிவிட்டோம். இந்த கஷ்டமான நேரத்தில் என்னுடன் இருந்து எனக்கு ஆறுதல் தந்தது ஹுசைன் தான். அவரது ஆதரவினால் தான் நான் இன்றும் மீடியாவில் நிலைத்து நிற்கிறேன்' என மணிமேகலை அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.