நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

சின்னத்திரை பிரபலமான மணிமேகலை வீடு மேல் வீடு, ஒன்றுக்கு இரண்டு கார்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலையை அன்று உற்றார் உறவினரும் சரி, ரசிகர்களும் சரி கடிந்து தான் பேசினார்கள். இவர்கள் திருமணம் நடந்து சில ஆண்டுகளில் ஹூசைன் மணிமேகலை இருவருமே மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால், தற்போது சொந்த ஊரில் பண்ணை வீடு, சென்னையில் அப்பார்ட்மெண்ட் வீடுகள், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் விலையுயர்ந்த பைக் என சாதித்து காட்டியுள்ளனர்.
இந்நிலையில், மணிமேகலை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நாங்கள் முதலில் ஐ-20 கார் வைத்திருந்தோம். அதற்கு மூன்று மாதங்கள் தவணை கட்டவில்லை என்று காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அப்போது நாங்கள் முடிவெடுத்தோம். அடுத்த நான்கு வருடத்திற்குள் பிம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்று. ஆனால், இரண்டரை வருடத்திலேயே அது நடந்துவிட்டது. அதேபோல் சென்னையில் வாடகை வீட்டிலும் பிரச்னை வந்தது. இப்போது வீடு வாங்கிவிட்டோம். இந்த கஷ்டமான நேரத்தில் என்னுடன் இருந்து எனக்கு ஆறுதல் தந்தது ஹுசைன் தான். அவரது ஆதரவினால் தான் நான் இன்றும் மீடியாவில் நிலைத்து நிற்கிறேன்' என மணிமேகலை அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.




