பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! |

சீரியலில் உச்சம் தொட்ட நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் கேப்ரில்லா செல்லஸ். கருப்பழகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், நடிப்பின் மீதிருந்த தீரா காதலால் சென்னைக்கு வந்தார். சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு சின்னத்திரை சீரியலான சுந்தரி மிகப்பெரிய அளவில் பெயர் புகழை பெற்று தந்தது.
சுந்தரி சீசன் 1 முடிந்த பிறகு சீசன் 2 வில் நடிக்க ஆரம்பித்த அவர் கர்ப்பமாக இருந்த காரணத்தால் அந்த சீரியலை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கேப்ரில்லாவின் கதாபாத்திரத்தில் அவரை தவிர வேறுயாரும் செட் ஆகமாட்டார்கள் என்பதால் அந்த சீரியலையே முடித்து வைத்துவிட்டனர். சுந்தரி சீசன் 2 கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது.
இதனையடுத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்ட கேப்ரில்லாவுக்கு அண்மையில் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுந்தரி சீரியல் குடும்பத்தினர் கேப்ரில்லாவின் சொந்த ஊருக்கே சென்று அவரது வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். சுந்தரி சீரியலில் கேப்ரில்லாவுக்கு மகளாக நடித்த தமிழ் பாப்பாவை கூட அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் மனம் நெகிழ்ந்த கேப்ரில்லா இதனை தனது இன்ஸ்டாகிராமில் வைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ரசிகர்களும் கேப்ரில்லாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.