சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத் மற்றும் கண்மணி மனோகரன் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அவர்களது திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நேற்று (செப்.,15) கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அஷ்வத் - கண்மணி தம்பதியினருக்கு ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.