'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் |
எதிர்நீச்சல் தொடரில் நடித்து வந்த மாரிமுத்து எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானார். இதனை தொடர்ந்து இனி ஆதிகுணசேகரானாக யார் நடிப்பார்? என்ற கேள்வி சோஷியல் மீடியாவில் விவாதத்தையே கிளப்பியது. ஆனால், இதுவரை மாரிமுத்து நடித்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் யாருமே தேர்வாகவில்லையாம். அதனால் அந்த கதாபாத்திரத்தில் எந்த நடிகரையும் மாற்ற முடியவில்லை. எனவே, ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்கு இணையாக ஆதிபகவன் என்ற கதாபாத்திரத்தை சீரியல் குழு உருவாக்கியுள்ளது. இதற்கான லீட் காட்சியும் அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் இடம் பெற்றது. ஆதிகுணசேகரனின் அண்ணனாக இந்த ஆதிபகவன் கதாபாத்திரம் இடம்பெறும் எனவும் இனி வரும் எபிசோடுகள் ஆதிபகவனை மையப்படுத்தி நகரும் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.