என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழில் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளிவந்த ' டிராகன்' படம் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் இந்த படத்தை பார்த்த பிறகு அஸ்வத் மாரிமுத்து மற்றும் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து அஸ்வந்த் மாரிமுத்து வெளியிட்ட பதிவில், "என் நண்பர்களுக்கு தெரியும், நான் எவ்வளவு ஆசையா அவரை சந்திக்கணும்னு உழைச்சிட்டு இருந்தேன்னு. என் திறமையாலயும் உழைப்பாலயும் மட்டும் அவரை சந்திக்கணும், ஒரு நாள் அவரோட வேலை செய்யணும்னு நினைச்சேன். வேலை பார்க்க முடியுமான்னு தெரியல, ஆனா அவரை சந்திச்சிட்டேன். அவருக்கு நேர் எதிரா உட்கார்ந்துட்டேன். எப்போதும் நான்தான் ரொம்ப பேசுவேன், என் டீம் நான் எவ்ளோ பெரிய ரசிகன்னு தெரிஞ்சு, நான் பேசுவேன்னு காத்துகிட்டு இருந்தாங்க. ஆனா, அவர் என்னை உற்று பார்த்தப்போ, என் கண்ணுல தானா கண்ணீர் வந்துடுச்சு! என் டீம் ஆச்சரியப்பட்டாங்க! ஏன்? அந்த மனுஷன் மேல அவ்வளவு பாசம்! எவ்ளோ? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது" என அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டுள்ளார்.