பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
தமிழில் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளிவந்த ' டிராகன்' படம் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் இந்த படத்தை பார்த்த பிறகு அஸ்வத் மாரிமுத்து மற்றும் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து அஸ்வந்த் மாரிமுத்து வெளியிட்ட பதிவில், "என் நண்பர்களுக்கு தெரியும், நான் எவ்வளவு ஆசையா அவரை சந்திக்கணும்னு உழைச்சிட்டு இருந்தேன்னு. என் திறமையாலயும் உழைப்பாலயும் மட்டும் அவரை சந்திக்கணும், ஒரு நாள் அவரோட வேலை செய்யணும்னு நினைச்சேன். வேலை பார்க்க முடியுமான்னு தெரியல, ஆனா அவரை சந்திச்சிட்டேன். அவருக்கு நேர் எதிரா உட்கார்ந்துட்டேன். எப்போதும் நான்தான் ரொம்ப பேசுவேன், என் டீம் நான் எவ்ளோ பெரிய ரசிகன்னு தெரிஞ்சு, நான் பேசுவேன்னு காத்துகிட்டு இருந்தாங்க. ஆனா, அவர் என்னை உற்று பார்த்தப்போ, என் கண்ணுல தானா கண்ணீர் வந்துடுச்சு! என் டீம் ஆச்சரியப்பட்டாங்க! ஏன்? அந்த மனுஷன் மேல அவ்வளவு பாசம்! எவ்ளோ? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது" என அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டுள்ளார்.