பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

நடிகர் விஜய் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்து, இரண்டு மாநாடுகளை நடத்தி முடித்துவிட்டு தற்போது சனிக்கிழமை தோறும் தலா இரண்டு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (செப்.,27) நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துவிட்டு கரூர் சென்ற விஜய், பிரசாரத்தை முடிக்கும் தருவாயில் அங்கே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த விஷயம் தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொருவரும் இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து ஒவ்வொரு விதமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் 'டிராகன்' படத்தில் கதாநாயகியாக நடித்த கயாடு லோஹர் விஜய்யின் இந்த பிரசாரக் கூட்டத்தில் பல உயிர்கள் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று வெளியானது. அந்த பதிவில், “உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அந்த கரூர் பிரசாரக் கூட்டத்தில் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரையும் நான் இழந்துவிட்டேன். இது தமிழக வெற்றிக் கழகத்தின் சுயநலமான அரசியல். விஜய்.. மக்கள் உங்களது புகழுக்காக விளையாட்டுப் பொருள்களா? இன்னும் எத்தனை பேர் உங்கள் பசிக்கு இறையாக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவை பார்த்து திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நடிகை கயாடு லோஹர், இப்படி வெளியான செய்தி பொய்யானது என்றும் அது தன்னுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கம் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்து தனது நிஜமான எக்ஸ் பக்கத்தில் இருந்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, கரூரில் எனக்கு யாரும் அப்படி நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றும் இது போன்ற தவறான செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.