ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

‛ஓ மை கடவுளே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே வரவேற்பை பெற தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்தப்படியாக நடிகர் சிம்புவின் படத்தை இயக்க போகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சில தினங்களாக சிம்பு படத்திற்கு பின் தனுஷ் படத்தை இவர் இயக்க போவதாக செய்தி பரவியது. இதை மறுத்துள்ள அஸ்வத், ‛‛எனது அடுத்த படங்கள் பற்றிய வதந்திகளை பரப்பாதீங்க. என் அடுத்த படம் முடிவாகும்போது அதை நானே முதலில் உங்களுடன் பகிர்வேன்'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.




