'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! | மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! |
‛ஓ மை கடவுளே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே வரவேற்பை பெற தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்தப்படியாக நடிகர் சிம்புவின் படத்தை இயக்க போகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சில தினங்களாக சிம்பு படத்திற்கு பின் தனுஷ் படத்தை இவர் இயக்க போவதாக செய்தி பரவியது. இதை மறுத்துள்ள அஸ்வத், ‛‛எனது அடுத்த படங்கள் பற்றிய வதந்திகளை பரப்பாதீங்க. என் அடுத்த படம் முடிவாகும்போது அதை நானே முதலில் உங்களுடன் பகிர்வேன்'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.