ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'ஓ மை கடவுளே, டிராகன்' போன்ற படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்தபடியாக சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றுவதற்கு புதிய நபர்கள் தேவை என்று சமூக வலைதளங்களில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். அதை பார்த்துவிட்டு 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
இந்த நிலையில் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்தியில், '10 உதவி இயக்குனர்களை மட்டுமே எடுப்பதற்கு முதலில் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இப்போது இந்த 15 ஆயிரம் பேரில் இருந்து என்னுடைய அடுத்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து 20 நபர்களை தேர்வு செய்யப் போகிறேன். என்னை டேக் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடும் அனைவருக்கும் இதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ஒரு பதிவு போடுகிறார் அஸ்வத் மாரிமுத்து.