2024ன் மற்றுமொரு 25 நாள் படம் 'அரண்மனை 4' | தமிழில் பிஸியாக இருக்கும் கிரித்தி ஷெட்டி | ‛அந்த காட்சி'யில் நடிக்க தயங்கிய தியாகராஜன்: நட்புகளிடம் தன் வருத்தத்தை தெரிவித்தார் | வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2ம் பாகத்தில் கவின்? | சல்மான் கானுக்கு வில்லனாக தென்னிந்திய நடிகர்களுக்கு முன்னுரிமை! | ஜூலை மாதத்தில் சர்தார்-2 படப்பிடிப்பு துவக்கம் | விஜய் 69வது படத்தில் இணைந்த மாஸ்டர் பட பிரபலம்! | பெங்களூரு போதை விவகாரம், நடிகை ஹேமாவுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள்? | 'சலார் 2' சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு | ரன்வீர் சிங் - பிரசாந்த் வர்மா படம் புதிய தகவல் |
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து சின்னத்திரை எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அண்மையில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஜோதிடர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனைத்தொடர்ந்து ஜோதிடர்கள் தரப்பில் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த வக்கீல் நோட்டீஸிற்கு தக்க பதிலை மாரிமுத்து அளிக்காத பட்சத்தில் அவர் மீது குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாரிமுத்து தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளிவராததால் தற்போது 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் ஒன்றாக இணந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் மாரிமுத்துவின் நடிப்பும் ஒன்று. எனவே, அவர் மீது தற்போது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.