தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! |
குக் வித் கோமாளி சீசன் 4 இறுதிப்போட்டி நடந்து முடிந்தது. இதில், சிவாங்கி தான் வெற்றி பெறுவார் என பலரும் கூறி வந்த நிலையில், இறுதி போட்டியில் மைம் கோபியே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவை ரசிகர்களும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல் இதுவரை நடந்த சீசன்களிலேயே மைம் கோபி தான் முதல் ஆண் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மைம் கோபிக்கு பரிசுத்தொகையாக 5 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த பணத்தை தனக்கு என்று இல்லாமல் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களின் சிகிச்சைக்கு கொடுக்க போவதாக மைம் கோபி கூறியுள்ளார். மைம் கோபியின் இந்த செயலை பாராட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.