ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
குக் வித் கோமாளி சீசன் 4 இறுதிப்போட்டி நடந்து முடிந்தது. இதில், சிவாங்கி தான் வெற்றி பெறுவார் என பலரும் கூறி வந்த நிலையில், இறுதி போட்டியில் மைம் கோபியே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முடிவை ரசிகர்களும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல் இதுவரை நடந்த சீசன்களிலேயே மைம் கோபி தான் முதல் ஆண் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மைம் கோபிக்கு பரிசுத்தொகையாக 5 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த பணத்தை தனக்கு என்று இல்லாமல் புற்றுநோயால் பாதிக்கபட்டவர்களின் சிகிச்சைக்கு கொடுக்க போவதாக மைம் கோபி கூறியுள்ளார். மைம் கோபியின் இந்த செயலை பாராட்டி பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.