டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'1987ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ராமாயணம். ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று காத்துக்கிடந்து பார்த்த தொடர். ஒவ்வொரு டிவிக்கு முன்னாலும் ஏராளமான மக்கள் அமர்ந்து பார்த்த தொடர். அந்த காலத்திலேயே ராமானந்த சாகர் பெரிய பட்ஜெட்டில் தயாரித்த தொடர். இதில் அருண் கோவில் ராமராகவும், தீபிகா சீதையாகவும், குத்துச்சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர்.
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் என்ற உலக சாதனையை படைத்தது. கொரோனா ஊரடங்கின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி 'ராமாயணம்' தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பு செய்தது. இந்த நிலையில் இந்த தொடரை 3வது முறையாக மீண்டும் ஒளிபரப்பாகிறது. ஷெமாரூ டிவியில் இந்த தொடர் இன்று (ஜூலை 3) முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடர் மொத்தம் 78 எபிசோட்களை கொண்டது. 'ஆதிபுருஷ்' படம் கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் நேரத்தில் 'ராமாயணம்' மீண்டும் ஒளிபரப்பாவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.




