ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா, தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடியனாகவும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் ஆங்கரிங்கும் செய்ய வருகிறார். அவருக்கு தற்போது வெள்ளித்திரையில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் தேடி வருகிறது.
இந்நிலையில், தனக்கு சம்பளமாக கிடைக்கும் பணத்தில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் பாலா, குழந்தைகளின் படிப்பு, முதியோர்களின் பராமரிப்பு என ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்து வருகிறார். அந்த வரிசையில் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அவர் முதியோர் இல்லத்திற்காக புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த ஆம்புலன்ஸ் முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு பரிசோதனை நேரங்களில் பயன்படும் என்றும், தவிர முதியோர் இல்லத்தை சுற்றி இருக்கும் வயதானவர்களுக்கும் இலவசமாக சேவை வழங்கும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற பல நல்ல விஷயங்களில் ஈடுபடும் பாலாவின் குணத்தை பலரும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.