அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சீனாவை பூர்வீகமாக கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். போலீஸ் ஸ்டோரி, டிரங்கன் மாஸ்டர், ரஷ் ஹவர், கராத்தே கிட் உள்ளிட்ட பல படங்களின் மூலம் உலக புகழ்பெற்றவர். இவரது படங்கள் உலகம் முழுவதும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகிறது. 'கராத்தே கிட் 2' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தனக்கு வயதாகி வருவதை சமீபத்தில் குறிப்பிட்ட ஜாக்கிசான் 'வயது முதிர்வை யாராலும் தடுக்க முடியாது. கடந்துவிட்ட இளமை யாருக்கும் திரும்பி வராது. அதற்கு நான் விதிவிலக்கல்ல' என்று தெரிவித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு முதுமை காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த அவர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது வயதிற்கேற்ற வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி உள்ள அவர், அதன்மூலம் 3,400 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துகளை பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். இந்த தொகை ஏழை மக்களின் மருத்துவம், மற்றும் கல்விக்காக செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சிறிய வயதில் வறுமையால் தவித்திருக்கிறேன். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். நான் பட்ட கஷ்டங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்பதால்தான் இந்த முயற்சி. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோஷம் அளவிட முடியாதது'' என்று குறிப்பிட்டுள்ளார்.