காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை இரட்டையர்கள். இசை கற்றது எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம். 1914ம் ஆண்டு பிறந்த எஸ்.எம்.சுப்பையா நாயுடு, 1976ம் ஆண்டு வரை இசையமைத்து வந்தார். பிறகு பக்கவாதத்தால் படுத்த படுக்கையானார்.
அந்த சமயத்தில்தான், எம்.எஸ்.விஸ்வநாதன், அவருக்காகவே இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சி மூலம் வசூலான ஒருலட்சம் ரூபாயை சுப்பையா நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கினார். 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய் என்பது இன்றைக்கு பல கோடி. 1979-ம் ஆண்டு மறைந்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.
''மெல்லிசை மன்னர்கள் என்று எங்களுக்குப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். திரை இசையில், அந்த மெல்லிசை எப்படி இருக்க வேண்டும் என்பதை, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடமும், ஜி.ராமநாதனிடமும்தான் கற்றுக் கொண்டோம். இவர்களை குரு ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறோம்' என்று மெல்லிசை மன்னர்கள் பல மேடைகளில் பேசியிருக்கிறார்கள்.
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் 46வது நினைவு நாள் இன்று.