பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் மலர் கதாபாத்திரத்தில் சந்தியாவும், பாண்டி கதாபாத்திரத்தில் ப்ரிட்டோ மனோவும் ஜோடியாக நடித்து வந்தனர். நிஜ வாழ்விலும் ஜோடியாக கமிட்டாகிவிட்ட இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரிலிருந்து அடுத்தடுத்து சந்தியாவும், ப்ரிட்டோ மனோவும் வெளியேறிவுள்ளனர்.
இதில் ப்ரிட்டோ மனோவுக்கு பதிலாக நடிகர் சுதர்சனம் கமிட்டான நிலையில், மலர் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி நேயர்களிடம் நிலவி வந்தது. தற்போது, மலர் கதாபாத்திரத்தில் சந்தியாவுக்கு பதிலாக நடிகை சிவன்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவன்யா, 'செவ்வந்தி' தொடரில் வில்லியாக கலக்கி வருகிறார். எனவே, அவரது எண்ட்ரி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.