ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
செவ்வந்தி சீரியலில் நடிகை சிவன்யா நெகட்டிவ் ரோலில் நடித்து வரவேற்பை பெற்று வருகிறார். இருதினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு அதிலிருந்து தப்பித்துள்ளார். பிறந்தநாளன்று தனது தம்பியுடன் கோயிலுக்கு பைக்கில் சிவன்யா சென்றுள்ளார். அப்போது திடீரென பலத்த காற்று வீச அவரது துப்பட்டா பைக் சக்கரத்தில் மாட்டி சுற்றியுள்ளது. இதில், துப்பட்டா சிவன்யாவின் கழுத்தை சுற்றி இறுக்க அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டு தழும்பு ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக பைக்கிலிருந்து கீழே விழாததாலும், சிவன்யாவின் தம்பி உடனடியாக வண்டியை நிறுத்தியதாலும் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் நேரமால் பத்திரமாக தப்பித்துவிட்டார். பிறந்தநாளன்று தனக்கு நடந்த இந்த சோக விபத்து குறித்து இன்ஸ்டாகிராமிம் சிவன்யா உருக்கமாக வீடியோ வெளியிட்டு தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.