ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
விஜய் டிவியில் கடந்த 2011-ல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் சரவணனாக மிர்ச்சி செந்தில்குமாரும், மீனாட்சியாக கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜா சந்திரனும் நடித்தனர். கிட்டத்தட்ட 500 எபிசோடுகள் வரை ஜோடியாக நடித்தவர்கள் அந்த சமயத்தில் காதல் வசப்பட்டு 2014ல் திருமணமும் செய்து கொண்டனர். கடந்த 4ஆம் தேதி கேரளாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஸ்ரீஜா.
திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள மிர்ச்சி செந்தில் தங்களுக்கு பிறந்த குழந்தை மூலம் தாங்களும் அப்பா அம்மாவாக புதிதாக பிறந்திருக்கிறோம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.