பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

விஜய் டிவியில் கடந்த 2011-ல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் சரவணனாக மிர்ச்சி செந்தில்குமாரும், மீனாட்சியாக கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜா சந்திரனும் நடித்தனர். கிட்டத்தட்ட 500 எபிசோடுகள் வரை ஜோடியாக நடித்தவர்கள் அந்த சமயத்தில் காதல் வசப்பட்டு 2014ல் திருமணமும் செய்து கொண்டனர். கடந்த 4ஆம் தேதி கேரளாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஸ்ரீஜா.
திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள மிர்ச்சி செந்தில் தங்களுக்கு பிறந்த குழந்தை மூலம் தாங்களும் அப்பா அம்மாவாக புதிதாக பிறந்திருக்கிறோம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.