காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
டிக் டாக் மூலம் பிரபலமான தனலெட்சுமி இந்த முறை பிக்பாஸ் வீட்டில் மக்கள் தரப்பு போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருந்தார். நிகழ்ச்சியின் போது பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் கடினமான போட்டியாளராக வலம் வந்த தனலெட்சுமியின் எவிக்சனை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் எலிமினேட் ஆன போது பெரிய அளவில் அவருக்கு சோஷியல் மீடியாக்களில் ஆதரவு எழுந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் லைவ் வந்த தனலெட்சுமி, பிக்பாஸிலிருந்து எவிக்ட் ஆனதை ஏற்றுக்கொள்ள சில காலம் பிடித்ததாகவும் மேலும் வீட்டிலும் சில பிரச்னைகள் இருந்ததால் உடனடியாக லைவ் வர முடியவில்லை என்று விளக்கமளித்தார். அப்போது அவரிடம் வழக்கம் போல் பிக்பாஸ் வீடு மற்றும் சக போட்டியாளர்கள் பற்றி கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர், அசீம் தான் தனக்கு பிடித்த போட்டியாளர் என்றும் ரச்சிதாவும், கதிரும் தங்கள் உண்மை முகங்களை காட்டாமல் விளையாடி வருவதாகவும் கூறினார்.
விக்ரமன் குறித்து பேசிய தனலெட்சுமி, 'அவர் பிக்பாஸ் கேமில் தேவையில்லாத ஆள். லெட்டர் டாஸ்க் மற்றும் சில டாஸ்க்குகளை விக்ரமன் கேம் மாதிரி கொண்டு செல்லவில்லை' என்று கூறியுள்ளார். அசீம் மற்றும் விக்ரமன் குறித்த தனலெட்சுமியின் இந்த கருத்து சோஷியல் மீடியாவில் சூடான விவதாங்களை கிளப்பியுள்ளது.