மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் தான் இயக்கி வரும் சீரியல்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இல்லத்தரசிகள் மனதில் இடம்பிடித்து வருகிறார். அவர் இயக்கிய தொடர்களில் 'கோலங்கள்', 'அல்லி ராஜ்ஜியம்', 'மாதவி', 'சித்திரம் பேசுதடி' வரிசையில் 'எதிர்நீச்சல்' தொடர் ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து குடும்ப பெண்கள் வெற்றியடைவதை கதைக்களமாக கொண்டுள்ளது. இந்த தொடர் ஒளிபரப்பான முதல் நாளிலிருந்தே கொஞ்சம் கூட தொய்வு ஏற்படாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடரை நிறுத்த சொல்லி ஒரு ரசிகையின் கணவர் திருச்செல்வத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'எதிர்நீச்சல் சீரியலை உடனடியாக நிறுத்துங்கள். என்னுடைய மனைவி தினமும் உங்கள் சீரியலை பார்த்துவிட்டு என்னை குணசேகரனாகவும், அவளை ஜனனியாகவும் நினைத்து கொள்கிறாள். அவள் நடவடிக்கைகளும் மொத்தமாக மாறிவருகிறது' என்று குறிப்பிட்டுள்ளாராம். இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய திருச்செல்வத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அந்த பேட்டியில் 'இதுபோன்ற கருத்துகள் வருவது சகஜம் தான். ஆனால், நான் சீரியலை நிறுத்தப்போவதில்லை' என்று கூறியுள்ளார்.




