23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் |
சின்னத்திரை நடிகை ரித்திகா தமிழ்செல்வி விஜய் டிவியின் 'பாக்கியலெட்சுமி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரித்திகாவும் விஜய் டிவியின் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் வினுவும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஹினிமூனுக்காக ரித்திகா கணவருடன் மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். இதன்காரணமாக 'பாக்கியலெட்சுமி' தொடரிலிருந்து ரித்திகா விலகிவிட்டார் என்றும், இனி அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை தான் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அதேசமயம் ரித்திகாவோ, சீரியல் குழுவோ அதுபோன்ற எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், ஹினிமூனை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ள ரித்திகா பாக்கியலெட்சுமி சீரியலில் மீண்டும் இணைந்துள்ளார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட, வீடியோவையும் புகைப்படங்களையும் தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து இதை உறுதிசெய்துள்ளார். ரித்திகா மீண்டும் சீரியலில் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.