'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
சினிமா மற்றும் சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் சுசித்ரா, 14 வயதிலேயே கன்னட சினிமாவில் அறிமுகாமாகி பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சைவம் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சின்னத்திரையிலும் 2008ம் ஆண்டிலேயே 'நாணல்' என்ற தொடரின் மூலம் அறிமுகமாகியிருந்தார். ஆனால், அப்போதெல்லாம் இவர் இந்த அளவுக்கு பிரபலமாகவில்லை. சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலெட்சுமி' தொடர் சுசித்ராவுக்கு செலிபிரேட்டி அந்தஸ்தை கொடுத்தது. மேலும், அந்த தொடரின் 300வது எபிசோடை வெற்றிவிழாவாக கொண்டாடிய நிகழ்ச்சியில் பலரும் சுசித்ராவை தங்கள் ரோல் மாடலாக நினைத்து தங்களது வாழ்வில் சாதித்ததை பதிவு செய்திருந்தனர். இந்த அளவுக்கு மக்கள் மனதில் சுசித்ரா தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவரே இப்போது தான் தன் வீடு வாங்கும் கனவை நனவாக்கியுள்ளார்.
சென்னையில் புதிதாக வீடு வாங்கியுள்ள சுசித்ரா அண்மையில் கிரகப்பிரவேச நிகழ்வை நடத்தியிருந்தார். இதனையடுத்து சுசித்ராவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பலவருடங்களாக திரைத்துறையில் பயணித்தாலும் சுசித்ராவின் வாழ்வில் இப்போது தான் வசந்தகாலம் ஆரம்பமாகியுள்ளது என்பதால், இந்த வெற்றி அவருக்கு என்றென்றும் நிலைக்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.