என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை | கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரும் குஷி ரவி | ஹீரோவான ‛பிக் பாஸ்' விக்ரமன் | ‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் |
தொலைக்காட்சி செய்திவாசிப்பாளரான மோகன்ராஜ் தமிழின் பல சேனல்களிலும் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார். போலீஸாக வேண்டும் என்ற கனவோடு இருந்த அவருக்கு காவல்துறையில் பணி கிடைக்கவில்லை. இருப்பினும் போலீஸ் வேலையின் மீது தீராக்காதல் கொண்ட அவர் தற்போது தமிழ்நாடு காவல்துறையில் டிராபிக் வார்டனாக பணியில் சேர்ந்துள்ளார். கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பே இந்த வேலைக்காக அவர் அப்ளை செய்து காத்திருந்த நிலையில் தற்போது அவருக்கு டிராபிக் வார்டன் வேலை கிடைத்துள்ளது.
இந்த பணியில் இருப்பவர்கள் காக்கி உடை அணிந்து டிராபிக் போலீஸூடன் இணைந்து பணியாற்றலாம். மேலும், காவல்துறையினருடன் சேர்ந்து சாலை கட்டுப்பாட்டு விதிகள் உட்பட பல விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளலாம். தற்போது 15 நாட்கள் இதற்காக பயிற்சி வகுப்பில் பங்குபெற்றுள்ள மோகன்ராஜ், அண்மையில் தனது கனவு ஒருவகையில் பலிதமானது குறித்து பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர், 'இது சம்பளத்திற்காக செய்யும் வேலை இல்லை. சமூக அக்கறைக்காக செய்வது. இந்த வேலைக்கு காலம் நேரம் கட்டாயம் கிடையாது, குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் செய்யலாம். இந்த வேலையில் சேர்ந்திருப்பது பெருமையாக உள்ளது' என்று கூறியுள்ளார். நியூஸ் ரீடர் ஒருவர் திடீர் போலீஸாக மாறி பேட்டிக் கொடுத்திருக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.