சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த தொடரின் சீசன் 2 கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஒளிபரப்பாக ஆரம்பமானது. சீசன் 2வில் செந்தில், ரக்ஷிதா, ராஜூ என பலரும் நடித்து வந்தனர். இந்நிலையில், திடீரென ரக்ஷிதாவும், அதன்பின் பிக்பாஸூக்காக ராஜூவும் சீரியலை விட்டு வெளியேறினர். இதனால், டிஆர்பியில் இந்த சீரியல் ஆட்டம் கண்டது.
இதனையடுத்து பலமுறை இந்த தொடர் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனாலும், மோனிஷா, பவித்ரா என வரிசையாக நடிகைகளை இறக்கி ஓரளவு ஓட்டி வந்தனர். சமீபத்தில் சரண்யாவின் திருமணத்தை வைத்து கூட சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. எனவே, இந்த தொடர் தற்போதைக்கு முடிவுக்கு வராது என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், கடைசி நாள் ஷூட்டிங்கை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.