20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த தொடரின் சீசன் 2 கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஒளிபரப்பாக ஆரம்பமானது. சீசன் 2வில் செந்தில், ரக்ஷிதா, ராஜூ என பலரும் நடித்து வந்தனர். இந்நிலையில், திடீரென ரக்ஷிதாவும், அதன்பின் பிக்பாஸூக்காக ராஜூவும் சீரியலை விட்டு வெளியேறினர். இதனால், டிஆர்பியில் இந்த சீரியல் ஆட்டம் கண்டது.
இதனையடுத்து பலமுறை இந்த தொடர் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனாலும், மோனிஷா, பவித்ரா என வரிசையாக நடிகைகளை இறக்கி ஓரளவு ஓட்டி வந்தனர். சமீபத்தில் சரண்யாவின் திருமணத்தை வைத்து கூட சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. எனவே, இந்த தொடர் தற்போதைக்கு முடிவுக்கு வராது என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், கடைசி நாள் ஷூட்டிங்கை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.