மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும் | தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் | நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் | சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் | எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம் | நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர் | பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி | முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு |

விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த தொடரின் சீசன் 2 கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஒளிபரப்பாக ஆரம்பமானது. சீசன் 2வில் செந்தில், ரக்ஷிதா, ராஜூ என பலரும் நடித்து வந்தனர். இந்நிலையில், திடீரென ரக்ஷிதாவும், அதன்பின் பிக்பாஸூக்காக ராஜூவும் சீரியலை விட்டு வெளியேறினர். இதனால், டிஆர்பியில் இந்த சீரியல் ஆட்டம் கண்டது.
இதனையடுத்து பலமுறை இந்த தொடர் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனாலும், மோனிஷா, பவித்ரா என வரிசையாக நடிகைகளை இறக்கி ஓரளவு ஓட்டி வந்தனர். சமீபத்தில் சரண்யாவின் திருமணத்தை வைத்து கூட சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. எனவே, இந்த தொடர் தற்போதைக்கு முடிவுக்கு வராது என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், கடைசி நாள் ஷூட்டிங்கை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.