ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு | பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்? | 'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் | முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா |

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர் வெற்றி படங்களை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன் காள மாடன்' என்கிற படத்தை உருவாக்கி வருகின்றார்.
பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அப்லாஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது. கபடி வீரராக இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கின்றார். இன்று இந்த படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு பிரமாண்டமான கபடி காட்சியுடன் நிறைவு பெற்றுள்ளது. இத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
பைசன் படப்பிடிப்பு நிறைவுப்பெற்றது குறித்து துருவ் விக்ரம் வெளியிட்ட பதிவில், ''பல மாத படப்பிடிப்பு. ரத்தம், வியர்வை, கண்ணீர் கடந்து இறுதியாக பைசன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.




