அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர் வெற்றி படங்களை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன் காள மாடன்' என்கிற படத்தை உருவாக்கி வருகின்றார்.
பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அப்லாஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது. கபடி வீரராக இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கின்றார். இன்று இந்த படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு பிரமாண்டமான கபடி காட்சியுடன் நிறைவு பெற்றுள்ளது. இத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
பைசன் படப்பிடிப்பு நிறைவுப்பெற்றது குறித்து துருவ் விக்ரம் வெளியிட்ட பதிவில், ''பல மாத படப்பிடிப்பு. ரத்தம், வியர்வை, கண்ணீர் கடந்து இறுதியாக பைசன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.