பிளாஷ்பேக் : காணாமல் போன 'கண்ணின் மணிகள்' | நீதிமன்ற தீர்ப்பு எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை : நடிகை அறிக்கை | அவதார் 3 ரிலீஸ் : ஒதுங்கும் தமிழ்ப் படங்கள் | விஜயகாந்தின் நல்ல மனசு : சரத்குமார் உருக்கம் | அப்பா ரஜினி படத்தை இயக்குகிறேனா? : மகள் சவுந்தர்யா சொன்ன பதில் | இளையராஜாவும், யுவுனும் இணைந்து பாடிய அம்மா சென்டிமென்ட் பாடல் | பொங்கலுக்கு இத்தனை பான் இந்தியா படங்கள்? தாங்குமா தியேட்டர்கள் ? | வார்த்தை விட்டு மாட்டிக்கொண்ட ராதிகா ஆப்தே! | தெலுங்கில் டப் செய்யப்படும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி? |

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர் வெற்றி படங்களை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன் காள மாடன்' என்கிற படத்தை உருவாக்கி வருகின்றார்.
பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அப்லாஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது. கபடி வீரராக இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கின்றார். இன்று இந்த படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு பிரமாண்டமான கபடி காட்சியுடன் நிறைவு பெற்றுள்ளது. இத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
பைசன் படப்பிடிப்பு நிறைவுப்பெற்றது குறித்து துருவ் விக்ரம் வெளியிட்ட பதிவில், ''பல மாத படப்பிடிப்பு. ரத்தம், வியர்வை, கண்ணீர் கடந்து இறுதியாக பைசன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.




