ரஜினிக்கு சங்கடம் தரக்கூடாது என நினைத்து டைட்டிலை மாற்றிய முருகதாஸ் | இயக்குனர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை | புரமோஷன் செய்தாலும் ரசிகர்களே வெற்றியை தீர்மானிக்கிறார்கள்: அர்ஜூன் கபூர் | சாவா படத்திற்கு வரி விலக்கு அறிவித்த மத்திய பிரதேச முதல்வர் | 25 நிமிடம் விளம்பரம் போட்டு சோதித்த திரையரங்கம் : ஒரு லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் | ஜுனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு துவங்கியது | சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகத்தின் அப்டேட் | தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த பிரியாமணி | புன்னகை பூவே சீரியலை விட்டு விலகிய சைத்ரா | இயக்குனராக ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா தனுஷ்? |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர் வெற்றி படங்களை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன் காள மாடன்' என்கிற படத்தை உருவாக்கி வருகின்றார்.
பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அப்லாஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது. கபடி வீரராக இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கின்றார். இன்று இந்த படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு பிரமாண்டமான கபடி காட்சியுடன் நிறைவு பெற்றுள்ளது. இத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
பைசன் படப்பிடிப்பு நிறைவுப்பெற்றது குறித்து துருவ் விக்ரம் வெளியிட்ட பதிவில், ''பல மாத படப்பிடிப்பு. ரத்தம், வியர்வை, கண்ணீர் கடந்து இறுதியாக பைசன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.