மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
பல வருட காலங்களாக பல ஹிட் சீரியல்களை ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் தயாரித்த சித்தி 2 சீரியலும், திடீரென முடித்து வைக்கப்பட்டது. தற்போது கலைஞர் டிவியில் பொன்னி கேர் ஆப் வாணி ராணி என்கிற புதிய தொடரை ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். வருகிற ஜூன் மாதம் முதல் இந்த தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் தற்போது பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் இணைந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ப்ரீத்தி சஞ்சீவ் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முன்னதாக கண்ணான கண்ணே தொடரில் வாசுகி என்ற கதாபாத்திரத்தில் ப்ரீத்தி நடித்து வந்தார். ஆனால், அவரது கதாபாத்திரம் விரைவிலேயே சீரியலை விட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ப்ரீத்தி ராதிகாவின் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள செய்தி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.