‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'கண்ணான கண்ணே' சீரியல் ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதிலும், பப்லுவின் கதாபாத்திரம் முதலில் வில்லன் தோற்றத்தில் காட்டப்பட்டு வந்த நிலையில், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பார்க்கவே பாவமாக இருக்கும் பப்லுவின் மீது ரசிகர்களுக்கு ஒரு பாசம் பிறந்துள்ளது. இந்நிலையில் பல நாட்களாக இந்த தொடரில் போட்டோ பிரேமில் மட்டுமே வந்த நடிகை இனியா தற்போது எபிசோடுகளில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கண்ணான கண்ணே தொடரில் கவுதமின் முதல் மனைவியான கவுசல்யா (இனியா) கதைப்படி இறந்துவிடுவார். அவரது போட்டோ மட்டுமே இப்போது வரை முக்கிய கதாபாத்திரமாக நடித்து வந்தது. தற்போது கெளசல்யா கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கவுசல்யா பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த ரசிகர்கள் இதனால் குஷியடைந்துள்ளனர். இனியாவின் என்ட்ரிக்கு பிறகு கண்ணான கண்ணே சீரியல் மேலும் பிரபலமாகும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.