லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'இதயத்தை திருடாதே' சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன். இவர் அண்மையில் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என பதிவிட்டிருந்தார். இதற்கு அர்த்தம் புரியாமல் பலரும் குழம்பி போயினர். நவீன் சீரியலை விட்டு விலகுகிறாரா எனவும் பேசி வந்தனர்.
இந்நிலையில், அவர் அப்படி சொல்லியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நவீன் தனது அம்மாவுடன் செய்திவாசிப்பாளர் கண்மணி சேகரின் போட்டோவையும் பதிவிட்டு காதல் எமோஜியை பதிவிட்டுள்ளார். இதை கண்மணி சேகரும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு பின்னணியில் கனா காண்கிறேன் பாடலை பதிவிட்டுள்ளார். இது ஒரு திருமண பாடலாகும். இதை வைத்து பார்க்கும் போது நவீனும், கண்மணியும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
இருவருக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளதால் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. பலரும் ஜோடி பொருத்தம் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். கண்மணி சேகரின் ரசிகர்களோ ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு வருகின்றனர். எது எப்படியோ? அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி.