ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பிரபல நடன இயக்குநர் மற்றும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருந்தாலும், அமீருக்கு அடையாளம் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தான். அதுவரை அமீர் பற்றி தெரியாத பலரும், அமீரின் சோகக்கதையை ஊடகத்தின் வாயிலாக தெரிந்து கொண்டனர். சிறுவயதிலேயே தந்தையையும், அதன் பிறகு தாயையும் இழந்த அமீர் தற்போது சமூகத்தில் நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர், முதல் செயலாக தனது அம்மாவின் சமாதிக்கு சென்று வணங்கினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், 'அம்மா இருந்திருந்தா சந்தோஷமா இருந்திருக்கும். அம்மா இருந்தப்ப எங்களுக்கு சாப்பாடு கொடுப்பாங்க. ஆனா அவங்க சாப்பிட்டு இருப்பாங்களான்னு தெரியாது. இப்ப அவங்க உயிரோடு இருந்திருந்தா அவங்க பாக்காத வாழ்க்கைய காட்டிருப்பேன். அவங்களுக்கு நல்ல டிரெஸ் வாங்கி கொடுத்திருப்பேன். எங்க அம்மா இறந்து போன நாள் இன்னும் என்னோட கனவுல வருது. இப்ப நான் நல்லா இருக்கும் போது அம்மா கூட இல்லையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு' என நினைத்து அழுகிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதைபார்க்கும் பலரும் அமீருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.