படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் | சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. முந்தைய பிக்பாஸ் சீசன்களே ஒப்பிடும் போது சீசன் 5 பெரிய அளவில் ஹிட் ஆக வில்லை. ரசிகர்களும் ஏமாற்றத்துடன் உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டும் வண்ணம் படக்குழுவினர் பல வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் நடிகர் சரத்குமார் என்ட்ரீ கொடுத்துள்ளார். டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குக்கு பிறகு, ஒரு குறிப்பிட்ட தொகையுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஆப்சன் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். இம்முறை அந்த டாஸ்க்கில் சரத்குமார் பெட்டியை எடுத்து வந்துள்ளார்.
அப்போது, 'போட்டி என்றால் வெற்றி தோல்வி இருக்கும். இந்த பெட்டியில் 3 லட்ச ரூபாய் இருக்கிறது. இதற்கு மேலேயும் இருக்கலாம். இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போகலாம். அது உங்கள் முடிவு.
ஆனால், அந்த முடிவு எடுக்கும் போது கவனம் தேவை. இன்றைய நன்மையா அல்லது நாளைய சாதனையா என்பதை யோசித்து முடிவெடுங்கள்' என்றுகூறி அந்த பணப் பெட்டியை வைத்து செல்கிறார். அதன் புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.