குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. முந்தைய பிக்பாஸ் சீசன்களே ஒப்பிடும் போது சீசன் 5 பெரிய அளவில் ஹிட் ஆக வில்லை. ரசிகர்களும் ஏமாற்றத்துடன் உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டும் வண்ணம் படக்குழுவினர் பல வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் நடிகர் சரத்குமார் என்ட்ரீ கொடுத்துள்ளார். டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குக்கு பிறகு, ஒரு குறிப்பிட்ட தொகையுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஆப்சன் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். இம்முறை அந்த டாஸ்க்கில் சரத்குமார் பெட்டியை எடுத்து வந்துள்ளார்.
அப்போது, 'போட்டி என்றால் வெற்றி தோல்வி இருக்கும். இந்த பெட்டியில் 3 லட்ச ரூபாய் இருக்கிறது. இதற்கு மேலேயும் இருக்கலாம். இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போகலாம். அது உங்கள் முடிவு.
ஆனால், அந்த முடிவு எடுக்கும் போது கவனம் தேவை. இன்றைய நன்மையா அல்லது நாளைய சாதனையா என்பதை யோசித்து முடிவெடுங்கள்' என்றுகூறி அந்த பணப் பெட்டியை வைத்து செல்கிறார். அதன் புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.