பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. முந்தைய பிக்பாஸ் சீசன்களே ஒப்பிடும் போது சீசன் 5 பெரிய அளவில் ஹிட் ஆக வில்லை. ரசிகர்களும் ஏமாற்றத்துடன் உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டும் வண்ணம் படக்குழுவினர் பல வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் நடிகர் சரத்குமார் என்ட்ரீ கொடுத்துள்ளார். டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குக்கு பிறகு, ஒரு குறிப்பிட்ட தொகையுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஆப்சன் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். இம்முறை அந்த டாஸ்க்கில் சரத்குமார் பெட்டியை எடுத்து வந்துள்ளார்.
அப்போது, 'போட்டி என்றால் வெற்றி தோல்வி இருக்கும். இந்த பெட்டியில் 3 லட்ச ரூபாய் இருக்கிறது. இதற்கு மேலேயும் இருக்கலாம். இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போகலாம். அது உங்கள் முடிவு.
ஆனால், அந்த முடிவு எடுக்கும் போது கவனம் தேவை. இன்றைய நன்மையா அல்லது நாளைய சாதனையா என்பதை யோசித்து முடிவெடுங்கள்' என்றுகூறி அந்த பணப் பெட்டியை வைத்து செல்கிறார். அதன் புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.