மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” |
இந்தியத் திரையுலகத்தில் இந்த வருடம் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக 'மகா அவதார் நரசிம்மா' படம் அமைந்துள்ளது. சுமார் 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இவ்வளவு குறைந்த பட்ஜெட், பெரிய லாபம் என்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
300, 400 கோடி செலவு செய்து தயாரிக்கப்பட்ட சில படங்கள் அதில் பாதியளவு கூட வசூலிக்காத நிலையில் இந்தப் படத்தின் வெற்றி இந்தியத் திரையுலகில் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களில் 7வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் 800 கோடியுடன் 'ச்சாவா' ஹிந்திப் படம், இரண்டாவது இடத்தில் 550 கோடியுடன் 'சாயரா' ஹிந்திப் படம், மூன்றாவது இடத்தில் 400 கோடியுடன் ‛கூலி' தமிழ்ப் படம் ஆகியவை உள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றுள்ளது. இந்தப் படம் தந்த வெற்றியால் இது போன்று பல ஆன்மிகப் படங்கள் வருவதற்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தந்துள்ளது.