ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

'அருவா சண்ட' படத்தை தயாரித்த வி.ராஜா, தற்போது தயாரிக்கும் படம் 'நெல்லை பாய்ஸ்'. கதையின் நாயகனாக அறிவழகனும், நாயகியாக ஹேமா ராஜ்குமாரும், வில்லனாக வேலராம மூர்த்தியும் நடிக்கிறார்கள். ரஷாந்த் அர்வின் இசை அமைக்கிறார், ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஜி இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது "இன்றைய நவீன நாகரீக உலகத்தில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவ கொலை சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் ஆணவ படுகொலை என்றால் தென் தமிழகம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றை தோலுரித்துக் காட்டும் விதமாகவும், ஈவு இரக்கமற்ற கல் நெஞ்சங்களையும் கலங்க வைக்கும் விதமாக சொல்வதோடு, நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்த நெல்லை சீமை என்பதையும் காட்டும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது. அக்டோபர் மாதம் படம் வெளியாகிறது" என்றார்.




