இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
கலர்ஸ் தமிழ் சேனலின் புதிய தொடர் வள்ளி திருமணம். இதில் நட்சத்திரா, நளினி, நாஞ்சில் விஜயன், ஷியாம் உள்பட பலர் நடிக்கிறார்கள். சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் வள்ளி திருமணம் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
தேனியை மையமாக கொண்ட கதை களம். கிராமத்து தெனாவெட்டு பெண் வள்ளி. கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அடாவடி வசூல் செய்வதுதான் அவரது தொழில். ஆனாலும் அன்புக்கு கட்டுப்பட்டவள். இவ்வளவு அடாவடியாக பெண்ணுக்கு எப்படி திருமணம் செய்து வைக்கப்போகிறோம் என்று கவலைப்படுகிறார் தாய். இந்த நேரத்தில் வெளிநாட்டில் தொழில் செய்து வரும் கார்த்திக் தொழில் விஷயமாக தேனிக்கு வருகிறார். வந்த இடத்தில் வள்ளியை சந்தித்து காதல் கொள்கிறார்.
காதலித்த பிறகுதான் அவர் அடாவடியான பெண் என்று தெரிகிறது. இதனால் அவர் தன் குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று கருதி அவரிடமிருந்து ஒதுங்குகிறார். தனது அடாவடித்தனமான குணம்தான் தன் காதலுக்கு தடையாக இருக்கிறது என்று கருதும் வள்ளி, தன் குணத்தை மாற்றிக் கொண்டு காதலுக்காக அடக்க ஒடுக்கமான பெண்ணாக மாறுகிறார். அவர்கள் காதல் கைகூடியதா? வள்ளி ஏன் அடாவடி பெண்ணாக இருக்கிறார் என்பதை சொல்வதுதான் தொடரின் கதை.