ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

விஜய் டிவி சூப்பர் சிங்கரான சவுந்தர்யா பாலா நந்தகுமார் நீண்ட இடைவெளிக்கு பின் இப்போது சின்னத்திரைக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
சூப்பர் சிங்கர் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சவுந்தர்யா பாலா நந்தகுமார். தொடர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றி மக்களை மகிழ்வித்து வருகிறார். வெள்ளித்திரையில் 'கபாலி', 'மாஸ்டர்' உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், ஒரு நடிகை என்ற அந்தஸ்தை சவுந்தர்யாவுக்கு பெற்று தந்தது சின்னத்திரை தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல்நிலவு' தொடரில் சவுந்தர்யா ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் ஏகபோக ஆதரவை பெற்றார். அந்த சீரியல் முடிந்த பின் வேறு சீரியலில் கமிட்டாவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. இந்நிலையில் ஜீ தமிழில் நேற்று, ஞாயிறு அன்று ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் திருமண வைபோகம் ஸ்பெஷல் எபிசோடில் சவுந்தர்யா மணமகளாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக வளர்த்தெடுக்கப்படுமா அல்லது கெஸ்ட் அப்பியரன்ஸ் போன்ற சிறு ரோலாக போய்விடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் நீண்ட இடைவெளிக்கு பின் சவுந்தர்யா சின்னத்திரையில் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர்.




